ஜெ.வின் கற்பனை வளம்-ராமதாஸ் 'பாராட்டு'!
விழுப்புரம்:
வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் மூடைகளை இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திண்டிவனத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 6 மாதங்களுக்கு பிறகு கூட்டப்படும் தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடக்கும் கூட்டத் தொடரில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க காலம் போதாது. குறைந்தபட்சம் 10 தினங்களாவது ஒதுக்கினால் தான் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அனைத்து பிரச்சனைகளும் விவாதிக்க முடியும்.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் போட்டியிடக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும்.
சிமெண்ட் விலை மேலும் உயரும் என்று தற்போது செய்தி வெளிவந்துள்ளது. விலை மேலும் உயர்ந்தால் கட்டிடத் தொழில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத் தெருவுக்கு வந்துவிடுவார்கள். இதனை தவிர்க்க சிமெண்டை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
ஜெயலலிதா தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தலைவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அதற்காக அவரைக் கொல்வதற்கு அமைச்சர் ஸ்டாலின் ஆள் அனுப்பினார் என்று ஜெயலலிதா கூறுவது அவரது கற்பனை வளத்தை தான் காட்டுகிறது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications