மாற்றி மாற்றி பேசும் ஜெயலலிதா- வீரமணி தாக்கு
சென்னை:
சேது சமுத்திரத்திட்டம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சு நிலையாக இல்லை என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேதுக் கால்வாய் திட்டத்திற்காக ஆதம் பாலத்தை உடைக்க வேண்டும் என்று பலமுறை அதிமுக தனது தேர்தல் அறிக்கைகளில் கூறியுள்ளது.
ஆனால் ஜெயலலிதா இப்போது மாற்றி மாற்றிப் பேசி வருகிறார். ஆறாவது வழித்தடத்தில் கால்வாய் திட்டம் கூடாது என்றவர், பிறகு இக்கால்வாய் வழியாக பெரிய கப்பல்கள் போக முடியாது என்றார்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தகுந்த விளக்கம் அளித்த பின்னர், சேதுக் கால்வாய் திட்டம் நிறைவேறினால் நாட்டுக்கே ஆபத்து என்கிறார்.
நீண்டகாலமாக இலங்கை அரசு இந்தத் திட்டத்தை எதிர்த்து பல குரல்களில் பேசி வந்தது. இப்போது ஜெயலலிதா அந்தக் குரலை எதிரொலிக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த செயல்பாடு உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் விரோதமானதாகும். இந்த விவகாரத்தில் அவரின் கூட்டணியில் உள்ள மதிமுக தலைவர் வைகோவின் நிலை என்ன என்று கேட்டுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications