கருணாநிதி டெல்லி சென்றார்
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சி கூட்டம் மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரிபாதி உட்பட 10 பேர் கொண்ட குழுவினருடன் இன்று பகல் 1.40 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் மூலம் டெல்லி புறப்பட இருந்தார் கருணாநிதி.
ஆனால் சென்னையில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் அந்த விமானம் 30 நிமிடம் தாமத்திற்கு பின்னர் 2.10க்கு புறப்பட்டுச் சென்றது.
முதல்வரை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கும் கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் சந்திப்பார் எனத் தெரிகிறது.
வரும் 21ம் தேதி சென்னை திரும்புவார் கருணாநிதி.