மோடியை கண்டு பயந்து வயிறு எரிகிறார்கள் - இல.கணேசன்
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வளர்ச்சியைக் கண்டு வயிறு எரிபவர்கள், பாஜகவின் செல்வாக்கை நினைத்து பயந்து போன ஒரு சிலர்தான் அவரை எதிர்த்து போராட்ட நடத்த உள்ளனர் என பாஜக மாநில தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இல.கணேசன் பேசுகையில், நரேந்திர மோடியின் அமோக வெற்றியை பொறுக்க முடியாமல் வயிறு எரிபவர்கள், பாஜகவின் செல்வாக்கை நினைத்து பயந்து போன ஒரு சிலர்தான் அவரை எதிர்த்து போராட போவதாக அறிவித்துள்ளனர்.
காவல் துறையினர் சென்னை வரும் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் தொடர்ந்து இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருப்பது நல்லதல்ல.
தேர்தல் நேரத்தில் வேலை செய்த காரணத்துக்காக முஸ்லீம் அமைப்புகள் மீது மென்மையான போக்கை அரசு கடை பிடிக்கிறதோ என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது.
வன்முறை மற்றும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.