கள்ள நோட்டு வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Subscribe to Oneindia Tamil
சேலம்: கள்ளநோட்டு வழக்கில் 6 பேருக்கு தலா 7 வருட கடுங்காவல் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், சின்னத்திருப்பதியை சேர்ந்த செல்வம்(44), வெங்கடாசலம்(28), சுரேந்திரன்(31), சுப்பிரமணி(41), சங்கர்(45), வெங்கடேசன்(56) ஆகியோர் கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து போலீசார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். விசாரணையில் இந்த கள்ளநோட்டுகளை மதுரையைச் சேர்ந்த சிலரிடமிருந்து வாங்கியதாக ஒப்புக் கொண்டனர்.
5 வருடமாக நடந்து வந்த வழக்கில் நேற்று சேலம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் டி.கிருபாநிதி தீர்ப்பளித்தார்.
அதில் குற்றவாளிகள் 5 பேருக்கும் 7 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 50,000 அபராதமும் விதித்தார்.












Click it and Unblock the Notifications