2 நாட்களுக்கு வங்கிகள் ஸ்டிரைக்!
சென்னை: நாடு முழுவதும் நாளை முதல் 2 நாட்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகளும், ஊழியர்களும் வேலைநிறுத்தம் செய்கின்றனர். இதனால் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்து, பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும்.
சிறு சிறு வங்கிகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கக் கூடாது, வங்கிப் பணிகளை அவுட்சோர்சிங் செய்யக் கூடாது, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இயற்கையான முறையில் மரணமடையும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தர வேண்டும் என்ற கோரிக்ைககளை வலியுறுத்தி வருகின்றனர் வங்கி ஊழியர்கள்.
இதை வலியுறுத்தி சமீபத்தில் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நாளை முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், திட்டமிட்டபடி நாளை முதல் 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் நடத்தப்படவுள்ளது.
வங்கிகள் எதுவும் நாளை இயங்காது. இதேபோல ஏடிஎம் மையங்களும் கூட நாளை இயங்காது. இதனால் பணம் எடுப்பதும், போடுவதும் 2 நாட்களுக்கு இயலாது.
இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் பெரும் ஸ்தம்பிப்பை சந்திக்கவுள்ளன. இன்றும் வங்கி விடுமுறை என்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கவுள்ளனர்.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
மாசம் 1.7 லட்சம் சம்பளம், கையில் மிஞ்சுவது வெறும் ரூ2520! இளம் தலைமுறை குடும்பங்களின் மறைக்கப்பட்ட கண்ணீர் கதை -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications