தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போலீஸ்காரரின் துப்பாக்கி கொள்ளை போயுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்ட காவல்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்பு 6 துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைத்துக் காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளது யார் என்பது இன்னும் தெரியாத நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு போலீஸ் துப்பாக்கி கொள்ளை போயுள்ளது.
பென்னாகரம் காவல் நிலையம் அருகே உள்ளது சார்நிலைக் கருவூலம். இங்கு நடராஜன் என்ற போலீஸ்காரர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று இரவுப் பணியில் அவர் இருந்தார்.
அப்போது தனது துப்பாக்கியை வைத்து விட்டு சாப்பிடச் சென்றார். சாப்பிட்டு விட்டுத் திரும்பியபோது துப்பாக்கியைக் காணாமல் திடுக்கிட்டார். அவர் துப்பாக்கியை வைத்து பூட்டி விட்டுச் சென்ற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பென்னாகரம் காவல் நிலையத்தில் நடராஜன் புகார் கொடுத்தார். தகவல் அறிந்ததும் டிஐஜி செண்பகராமன், மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டோர் வந்து விசாரணை நடத்தினர்.
மீண்டும் போலீஸ் துப்பாக்கி கொள்ளை போன சம்பவம் தர்மபுரி காவல்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பென்னாகரம் போலீஸார் காணாமல் போய் விட்ட துப்பாக்கியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications