எங்களை ஏன் சந்திக்கவில்லை பிரியங்கா?-ராஜீவுடன் பலியானோர் குடும்பங்கள் கேள்வி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் தலையீட்டால் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதேசமயம், அவருடைய கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தனது தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது முதலே சோனியாவுடன் கடிததத் தொடர்பு வைத்துள்ளார் நளினி. இந்த நிலையில் சமீபத்தில் வேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா சந்தித்தது ெபரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
தற்போது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவருடன் பலியானவர்களின் குடும்பத்தினரும், பிரியங்காவின் சந்திப்புக்கு எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.
செங்கை மேற்கு காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முகம்மது இக்பால், ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து உயிரிழந்தவர். அவரது மனைவி நசீம் பானு மற்றும் மகன் ஜாவித் இக்பால் ஆகியோர் கூறுகையில், ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கக்கூடாது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை மன்னிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றனர்.
அதேபோல குண்டுவெடிப்பில் உயிரிழந்த லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகரின் மகன் லீக் மோகன், நளினிக்கு பெண் குழந்தை உள்ளது என்பதால் அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.
நளினிக்கு மன்னிப்பு அளிக்கவே கூடாது. இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நான் கடிதம் எழுதினேன் என்று கூறியுள்ளார்.
வெடிகுண்டு சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்னும் உடலில் பாய்ந்த 70க்கும் மேற்பட்ட குண்டு துகள்களுடன் போராடிக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, எனது மருத்துவ செலவை நானேதான் பார்த்துக் கொண்டேன். சொந்த செலவில் நீதிமன்றத்திற்கு சென்று சாட்சியமளித்தேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்தோ, காந்தி குடும்பத்திலிருந்தோ எங்களுக்கு எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. யாரும் தங்களை வந்து பார்க்கக் கூட இல்லை என்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications