For Daily Alerts
Just In
மக்கள் கையில் பணம் அதிகம் புழங்குவதால் விலைவாசி உயர்வு: அன்பழகன்
சென்னை: மக்கள் கையில் முன்பை விட அதிக அளவில் தற்போது பணம் புழங்கி வருவதால்தான், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் வணிகவரித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு அவர் பேசுகையில், சமீபத்திய அத்தியாவசியப் பொருட்களின் திடீர் விலை உயர்வு தமிழகம் சம்பந்தப்பட்டதோ அல்லது இந்தியா சம்பந்தப்பட்டதோ மட்டுமல்ல. மாறாக இது உலகளாவிய பிரச்சினை.
பண வீக்கத்தால் விலைவாசி உயரவில்லை. மாறாக, மக்கள் கையில் அதிக அளவில் பணப் புழக்கம் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
இருப்பினும் விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளைக் குறை கூறுவது பொருத்தமற்றது. விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வர இரு அரசுகளுமே உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் உள்ளன என்றார்.
Story first published: Wednesday, April 30, 2008, 9:53 [IST]