வைரஸை 'விரட்டும்' கழுதை பால் விற்பனை ஜோர்!

Subscribe to Oneindia Tamil

Donkey
நெல்லை: மக்களின் நம்பிக்கைகளுக்கு ஒரு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. நெல்லையில் கழுதைப் பால் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த 8 மாதங்களுக்கு முன் சிக்குன்குன்யா நோய் பொதுமக்களைத் தாக்கியது. அப்போது கழுதை பால் வாங்கி குடித்தவர்களுக்கு நோயிலிருந்து நிவாரணம் கிடைத்ததாக பரவலாக்க் கூறப்பட்டது.

மேலும் கழுதை பால் குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை, ஊதுகாமாலை, சொரி, சோகை மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் கை, கால் குடைச்சல் போன்ற நோய்களுக்கும் சிறந்த மருந்தாகக் கருதப்பட்டு வருகிறது.

இதற்காக சிலர் தாங்கள் வளர்த்து வந்த கழுதைகளுடன் ஊர் ஊராகச் சென்று ஒரு சங்கு ரூ.10க்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது நெல்லையிலும் கழுதைப் பால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

திருச்சியிலிருந்து குடும்பத்துடன் வந்துள்ள சிலர் நெல்லையில் முகாமிட்டு அங்கிருந்து காலையில் பல்வேறு பகுதிகளுக்கு கழுதைகளுடன் சென்று பால் கறந்து விற்பனை செய்கின்றனர்.

இது குறித்து அவர்களிடம் நமது நெல்லை நிருபர் விசாரித்ததில், ஒரு சங்கு பால் ரூ.10க்கு விற்பனை செய்வதாகவும், இதில் ஒரு நாளைக்கு ரூ.200 கிடைப்பதாகவும் தெரிவித்தனர். இதை வைத்துதான் இவர்கள் பிழைப்பை நடத்துகிறார்களாம். நமது செய்தியாளர் எதிரிலேயே ஏராளமான பெண்கள் தங்கள் கைகுழந்தைகளுக்கு ஆர்வத்துடன் கழுதை பால் வாங்கிக் கொடுத்தார்களாம்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, குழந்தைகளைத் தாக்கும் பலவித நோய்களுக்கு கழுதைப்பால் சிறந்த மருந்து என்பது எங்கள் பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வரும் வழக்கம். அதைத்தான் இப்போது நாங்கள் கடைப்பிடிக்கிறோம். எந்த நோயும் எங்கள் குழந்தைகளை அண்டாது, என்றனர் அப்பெண்கள்.

குழந்தைகள் நல சிறப்பு அரசு மருத்துவர் சி.ராஜேஷ்கண்ணன் இதுகுறித்து கூறியதாவது:

இதை மூடத்தனமான மருத்துவம் என்று சொன்னாலும் மிகையில்லை.

சூடு பண்ணாமல் கொடுக்கப்படும் எந்த பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப்பால் மட்டுமே இதில் விதிவிலக்கு. இப்படிப்பட்ட முட்டாள்தனமான செய்கைகளால் நோய் கிருமிகள் குழந்தைகளை கடுமையாகத் தாக்கும். மேலும் இத்தகைய பால் ஜீரணம் ஆக நெடுநேரம் பிடிக்கும்.

இதன் மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு, தொற்று நோய்கள் உடலுக்குள் உருவாகும் நிலை ஏற்படும்.

இதனால் பின்னாளில் மிருகத்திலிருந்து வரும் நோய்கள் பல மனிதர்களைத் தாக்கும் அபாயமும் உள்ளது. மருத்துவ வசதியற்ற காலகட்டத்தில் அறியாமையினால் நம் முன்னோர்கள் இதுபோன்ற செயல்களில் இறங்கியிருப்பார்கள். அதனை இன்றும் நாம் தொடர்வது வடிகட்டின மூடத்தனம், என்றார்.

எத்தனை பெரியார் வந்தாலும் ...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+