இலங்கை அகதிகள் சொத்து வாங்குவது குறித்து போலீஸ் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சொத்துக்கள் வாங்குகின்றனரா என்பதை கண்காணிக்க போலீஸார் ஆய்வு பணியை தொடங்கியுள்ளனர்.

இந்தியக் குடியுரிமை இல்லாதவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சொத்துக்கள் வாங்க முடியாது என்பது சட்டம். இந்த நிலையில் இலங்கை தமிழ் அகதிகள் பலர் சட்டத்திற்குப் புறம்பாக தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், இலங்கைத் தமிழ் அகதிகள் சட்டத்திற்குப் புறம்பாக சொத்துக்கள் வாங்குகின்றனரா என்பதை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து கியூ பிரிவு போலீஸாரும், வருவாய்த்துறையினரும் அகதிகள் சொத்துக்கள் வாங்கியுள்ளனரா என்பதுகுறித்த ஆய்வில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+