தெ.ஆப்பிரிக்க வெள்ளத்தில் சிக்கி சென்னை தொழிலதிபர் சாவு
டர்பன்: தென் ஆப்பரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சென்னை தொழிலதிபர் பலியானார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் பெய்த கன மழையைத் தொடர்ந்து அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சங்கலிங்கம் செட்டியார் (73) என்பவர் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளது. டர்பன் நகரில் அவர் இந்தியப் பொருட்கள் மற்றும் டிவிடி விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த வாரஇறுதியில்அவர்தனது நண்பரைப் பார்க்க போயிருந்தபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். சனிக்கிழமை மாலை அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரது உடல் மரம் ஒன்றில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. செட்டியாரின் உடலை சென்னைக்கு கொண்டு வரும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications