சேவதாள மாநாடு- சென்னை வருகிறார் ராகுல்
கரூர்: காங்கிரஸ் சேவாதளம் சார்பில் முதல் அரசியல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருப்பதாக மாநில காங்கிரஸ் சேவா தள தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூரில் மாநில காங்கிரஸ் சேவா தள தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்திலும், மாவட்டத்திலும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் உள்ளவர்களை மாற்றி விட்டு புதியவர்களை நியமிக்க அகில இந்திய தலைமை முடிவு செய்துள்ளது.
சோனியா காந்தியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். மாநில தலைவரை மாற்றக்கூடாது என போராட்டத்தில் ஈடுபடுவது கட்சி விரோத நடவடிக்கையாகும்.
பாஜக ஆட்சியின் போது சார்க் மாநாட்டில் கையெழுத்து போட்டதால் தான் விலைவாசி உயர்ந்துள்ளது.
மக்களை பாதிக்கும் விஷியங்களில் மத்திய அரசு உடனடி அக்கறை எடுத்து செயல்படும்.
சேவாதளம் சார்பில் அரசியல் முதல் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
மத்திய அரசு, மாநில அரசு சாதனைகளை சைக்கிள் பிரச்சாரம் மூலம் விளக்க உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications