ஹஜ் பயண அனுமதிக்கு 10ம் தேதி குலுக்கல்
சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல விண்ணப்பித்துள்ளவர்களில், 3181 பேரைத் தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடக்கிறது.
2008-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து 3,181 பேர் இந்தப் புனித யாத்திரையில் கலந்து கொள்ள மத்திய ஹஜ் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், மொத்தம் 10 ஆயிரத்து 538 விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. அதில் 30 பேர் குழந்தைகள்.
எனவே, உச்ச வரம்பின்றி எல்லோரையும் அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்க வேண்டும் என மத்திய அரசிடம் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய ஹஜ் குழு கூறியுள்ளபடி 3181 பேரைத் தேர்வு செய்வதற்கான குலுக்கலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் அப்துல் சுக்கூர் அரங்கில் காலை 10.30 மணிக்கு குலுக்கல் நடக்கும். சுற்றுச் சூழல் மற்றும் வக்புவாரியத் துறை அமைச்சர் டி.பி.எம். மொய்தீன்கான் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
விண்ணப்பம் செய்தவர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications