குற்றாலம்: கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது

குற்றாலம் பஸ் நிலையப் பகுதியல் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது காலை 7 மணியளவில் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள்மேலமெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த கணேசன், நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.
அவர்களை சோதனை செய்தபோது, கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கணேசனிடம் நூறு ரூபாய் கள்ள நோட்டுகள் 15ம், தங்கராஜூவிடம் நூறு ரூபாயி கள்ள நோட்டுகள் 100ம் இருந்தது.
மேலும், கேரளாவை சேர்ந்த பெயர் தெரியாத நபர்களிடம் நூறு ரூபாய் கள்ள நோட்டுகளை பெற்றதாகவும், அதை குற்றால சீசனில் பல இடங்களில் புழக்கத்தில் வி்ட்டதாகவும், அதனால் ரூ.16,500 கிடைத்ததாகவும் கூறினர். இதையடுத்து போலீஸார் அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டகளை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications