தாக்குதல்: இந்தியன் முஜாஹீதின் இ-மெயிலில் மிரட்டல்
டெல்லி: குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தப்போவதாக இந்தியன் முஜாஹீதின் என்ற தீவிரவாத அமைப்பு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது.
பிரபல தனியார் டிவி நிறுவனங்கள் சிலவற்றுக்கு இந்தியன் முஜாஹீதின் தீவிரவாத அமைப்பு இன்று இ-மெயில் அனுப்பியுள்ளது. அதில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தாக்குதல் நடத்தப்போவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 26ம் தேதி அகமதாபாத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று இந்த தீவிரவாத அமைப்பு இ-மெயில் அனுப்பியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை போலீஸார் பிடித்து விசாரித்த வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இ-மெயிலில், அகமதாபாத்தில நடந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களின் போட்டோக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் சிமி இயக்கத்துக்கும், தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஆதரவாக வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
அகமதாபாத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து சிமி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியன் முஜாஹூதின் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications