பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயிடம் செயின் பறிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கணவரோடு பைக்கில் சென்ற பெண் எஸ்ஐயின் கழுத்தில் இருந்த 5 பவுன் ஜெயினை மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
திண்டுக்கல் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிபவர் ராஜாங்கம். இவரது மனைவி அம்பிகா. இவர் திண்டுக்கல் சமுகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார்.
கணவர் ராஜாங்கத்துடன் திண்டுக்கல் ரவுண்டானா பகுதியில் பைக்கில் சென்றார் அம்பிகா. அப்போது எதிரே பைக்கில் வந்த இருவர் எஸ்ஐ அம்பிகாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எஸ்ஐ அம்பிகாவும், அவரது கணவரும் அவர்களை விரட்டிச் சென்றனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து திண்டுக்கல் தாலுக்கா போலீஸில் அம்பிகா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்த கொள்ளையர்களை தேடி வருகி்ன்றனர்.












Click it and Unblock the Notifications