வடிவேலு வீடு மீது தாக்குதல்: பைக் எண்கள் சிக்கின

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 30க்கும் மேற்பட்டோர் வந்த கும்பல் அடித்து நொறுக்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலை வெறித் தாக்குதலுக்கு விஜயகாந்த்தான் காரணம். அவர் தூண்டுதலின் பேரில்தான் அவரது கட்சியினர் வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வடிவேலு குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தார். அதன் பேரில் விஜயகாந்த் உள்ளிட்ட 30 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வடிவேலுவின் குற்றச்சாட்டை விஜயகாந்த் மறுத்துள்ளார். மாறாக, முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் வடிவேலு அவதூறாக புகார் கூறியுள்ளார். கருணாநிதியின் விளையாட்டுக்கு வடிவேலு பகடைக்காயாகி விட்டார் என்று கூறியுள்ளார்.
போலீஸ் தீவிர விசாரணைச
இப்படி ஒரு பக்ககம் புகார் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் போலீஸார் மறுபக்கம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுவரை 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது. வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் உள்ள தெருவில் வசிப்போரிடமும் விசாரணை நடந்துள்ளது.
இதில் நான்கு மோட்டார் சைக்கிள்களின் எண்கள் கிடைத்துள்ளனவாம். இதை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளனவாம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications