ஐ.நா.: கூட்டத்தில் தமிழில் பேசிய அதிபர் ராஜபக்சே

தமிழ் மொழியின் தாயகமான தமிழ்நாடு, இந்தியாவில் உள்ளது. உலகெங்கும் பல கோடி மக்கள் தமிழைத் தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது.
இருப்பினும் இதுவரை ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் யாரும் தமிழில் பேசியதில்லை. ஆனால் முதல் முறையாக, சிங்களத்தை தாய் மொழியாகக் கொண்ட அதிபர் ராஜபக்சே நேற்று தமிழில் பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஐ.நா. சபையின் 63வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்துள்ளார் ராஜபக்சே. நேற்று அவர் ஐ.நா. சபையில் உரை நிகழ்த்தினார்.
இலங்கையில் நிலவி வரும் தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் பேசியபோது தமிழுக்கு மாறினார். ராஜபக்சே அப்போது கூறுகையில், எனது தாய்மொழி சிங்களம். இருந்தாலும் இனப் பிரச்சினை குறித்து தமிழில் சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன்.
சிங்களமும், தமிழும், இலங்கை மக்களின் இரு மொழிகள். பல நூற்றாண்டுளாக இந்த இரு மொழிகளையும் இலங்கை மக்கள் பேசி வருகின்றனர். இரு மொழிகளும், இலக்கியத்தில் வளமை படைத்தவை. எங்களது நாட்டின் ஆட்சி மொழிகளாக இரு மொழிகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எங்களது நாட்டின் ஜனநாயகத்தை விரிவுபடுத்தும் ஒருமுகமாக, இரு மொழி பேசும் மக்களின் உறவுகளும் வலுப் பெற்று வருகின்றன. எங்களது எதிர்கால வளர்ச்சியின் அஸ்திவாரமாக இரு மொழி மக்களும் திகழ்வார்கள்.
ஒரே நாடு என்ற குடையின் கீழ் இரு மொழி பேசும் மக்களும், வளமையான சுதந்திரமான, இலங்கையை உருவாக்குவார்கள். இரு இன மக்களின் பிணைப்பும் நீடித்து நிலைக்கும் என்றார் ராஜபக்சே.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications