இலங்கை தாக்குதல்-மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்து வரும் 10ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அவர் கூறியதாவது:
கச்சத்தீவு பகுதி அருகி்ல் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
இந்த தாக்குதல்களை உடனே தடுத்து நிறுத்த கோரி மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் சங்கங்கள் வேண்டுகோள் விடுத்தன. ஆனால் இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்படுகிறது.
இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்தும், கச்சத்தீவை மீட்கக் கோரியும் வரும் 10ம் தேதி மீனவர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications