நாச்சிகுடா: புலிகளின் நிலைகள் மீது சரமாரி குண்டு வீச்சு-25 பேர் பலி
கொழும்பு: கிளிநொச்சியின், நாச்சிகுடா பகுதியில், விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகளில் இலங்கை விமானப்படையினர் சரமாரியாக குண்டு வீசித் தாக்கினர். இதில் 25 விடுதலைப் புலிகள், 2 அப்பாவித் தமிழர்கள், 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சியைப் பிடிக்க இலங்கை ராணுவமும், விமானப்படையும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் நாச்சிகுடா பகுதியில் உள்ள புலிகளின் முக்கிய நிலைகளைக் குறி வைத்து விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்கின.
இந்தத் தாக்குதலில் 25 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் 2 பேரும், ராணுவத் தரப்பில் 3 பேரும் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்து விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், விமான தாக்குதல் வெற்றி பெற்றது. புலிகளின் முக்கிய ஏவுதளங்களை சேதப்படுத்தி விட்டோம் என்றார்.
அதேபோல அக்கரையான் குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுடன், ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டது.
மேற்கு அக்கரையாகன்குளத்தில் உள்ள புலிகளின் இரண்டு பதுங்கு குழிகளை ராணுவம் சேதப்படுத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கிளிநொச்சியைச் சுற்றிலும் பல இடங்களில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications