மதுரை கப்பலூரில் 2 காவலாளிகள் கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தின் 2 காவலாளிகள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
மதுரை திருமங்கலத்தையடுத்த கப்பலூர் தொழிற்பேட்டையில் கனரக வாகனங்களின் விற்பனை நிலையங்கள், பழுது பார்க்கும் பணிமனைகள் உள்ளன.
அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த மணிவண்ணன் (45), மூர்த்தி (50) ஆகியோர் இரவு நேர காவலர்களாக பணியாற்றி வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு இருவரும் பணிக்குச் சென்றனர்.
நேற்று காலை இந்த இருவரும் டிரைவர்கள் ஓய்வெடுக்கும் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
உடல்கள் அருகே உருட்டுக்கட்டைகள் மற்றும் ஆயுதங்கள் கிடந்தன.
சம்பவம் நடந்த அந்த நிறுவனத்தின் கேஷ் கவுண்டர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ. 30,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications