திருவையாறு-நீதிபதி மனைவிடம் நகை பறிப்பு!
Subscribe to Oneindia Tamil
திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே நீதிபதி மனைவிடம் நகை பறிக்கப்பட்டது.
திருவையாறு குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக உள்ள கோவிந்தராஜ், திருவையாறு நீதிபதி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35).
இவர் தன் வீட்டின் பின்புற வாசலில் வெளியே வந்தபோது ஒருவன் அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அதன் மதிப்பு ரூ.30,000.
இது குறித்து ராஜலட்சுமி திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications