நிதி நெருக்கடிக்கு தீர்வு: ஐ.நா. குழுவில் ரெட்டி
Subscribe to Oneindia Tamil
ஐ.நா.: உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. அமைத்துள்ள பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ஒய்.வி. ரெட்டி இடம் பெற்றுள்ளார்.
இதற்கான அறிவிப்பை ஐ.நா. பொதுச் சபை தலைவர் மிகுவல் எஸ்கோடா வெளியிட்டுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியை தீர்ப்பது மற்றும் உலக நிதி நிறுவனங்களின் சீரமைப்பு குறித்து இந்தக் குழு ஐ.நா.வுக்குப் பரிந்துரைக்கும்.
2001ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான ஜோசப் ஸ்டிகிலிட்ஸ் இந்தக் குழுவின் தலைவராக செயல்படுவார்.
இந்தக் குழுவில், ஜோமோ க்வாமே சுந்தரம், ஜோஸ் அன்டோனியோ ஓகாம்போ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications