திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியாசுவாமி கோயிலில் மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வரும் 16ம் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 4.45 உதய மார்த்த தீபாரதனை, அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி ஆராதனை, காலை 8.45க்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை, 6.45க்கு ராக்கால தீபாரதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாரதனை, 8 மணி பள்ளியறை தீபாரதனை, நடை திருக்காப்பிடுதல் ஆகியவை நடக்கின்றன.
இந்த பூஜை கால மாற்றங்கள் ஜனவரி 13ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications