இளங்கோவனுக்கு கொலை மிரட்டல் - தங்கபாலுவுக்கு 2வது மிரட்டல்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுக்கு இம்மாதத்தில் இரண்டாவது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இவரை தவிர்த்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.எல்.ஏக்கள் ஞானசேகரன், கார்வேந்தன் ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் தேதி சென்னை அடையாரில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு வீட்டுக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதேபோல் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கும் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வந்தன.
இதையடுத்து தங்கபாலு தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலீசில் மனு அளித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் தங்கபாலுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் காரியகமிட்டி செயலாளர் தாமோதரன் கூறுகையில்,
சத்தியமூர்த்தி பவனுக்கு இன்று காலை கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் சில தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டது.
அதில் குடியரசு தினம் முடிந்து விட்டது. இலங்கையில் போரை நிறுத்த மத்திய அமைச்சர் பிரணாப் போய் விட்டார். மிகவும் மகிழ்ச்சி. போரை நிறுத்தாவிட்டால், தங்கபாலு, இளங்கோவன், ஞானசேகரன், கார்வேந்தன் நால்வரில் ஒருவர் பலியாகிவிடுவர். மத்திய அரசே இதை புரிந்து கொள்.
இனி கடிதம் இல்லை. செயல் தான் என அக்கடிதத்தில் உள்ளது. கடிதத்தை அனுப்பிய மர்ம கும்பல் அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து அனுப்பி உள்ளது. அது எங்கிருந்து, யாரால் அனுப்பப்பட்டது என்ற விபரம் எதுவும் அதில் இல்லை. இது குறித்து போலீசிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார் தாமோதரன்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications