ஒசாமா பின் லேடன் இருப்பிடம் கண்டுபிடிப்பு?

சர்வதேச நாடுகள் பலவற்றால் தேடப்பட்டு வரும் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க அமெரிக்கா கடந்த 8 ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து வருகிறது.
இதற்காக அமெரிக்க புவியியல் ஆய்வாளர் தாமஸ் கில்லஸ்பி தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர், செயற்கோள் மற்றும் நவீன புவிவியல் கொள்கைகளை வைத்து தேடி வருகின்றனர். இதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருப்பதாக தாமஸ் கில்லஸ்பி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள குர்ராம் ஏஜென்சியில் அமைந்துள்ள பராச்சினர் நகரில் (Parachinar town) ஒசாமா இருக்கிறார். இந்நகரம் இஸ்லாமாபாத்தில் இருந்து 290 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
பாகிஸ்தானின் பெஷாவரில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்லும் முக்கிய வழியில் இந்நகரம் இருக்கிறது. மேலும் ஒசாமா கடைசியாக நேரில் தோன்றிய டோரா போரா மலை பகுதி பராச்சினர் நகருக்கு அருகில் இருக்கிறது.
ஒசாமாவின் பழக்கவழக்கம் மற்றும் அவரின் தேவைகள் ஆகியவை இந்த ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவின. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடனேயே அவர் பாகிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டார்.
அவரது உயரம் 6 அடி 4 அங்குலம் என்பதால் அவரால் குகைகளில் தொடர்ந்து நீண்டநாள் வாழ்வது கடினம். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் தினமும் 'டையலசிஸ்' செய்ய வேண்டும். இதற்கான மருத்துவ சாதனம் இயங்க வேண்டுமென்றால் தினமும் அதிக மின்சாரம் தேவைப்படும்.
ஆளில்லாத இடங்களில் தான் அவர் தங்குவார் என்றாலும் அங்கு பலத்த பாதுகாப்பு உடைய குடியிருப்பு தேவைப்படும். இந்த அனைத்து கூறுகளும் கொண்ட மூன்று கட்டிடங்கள் பராச்சினர் நகரில் இருக்கிறது என்றார் தாமஸ் கில்லஸ்பி.
அவரது மறைவிடம் இது தான் என உறுதிப்படுத்தப்பட்டாலும் அங்கு அமெரிக்க ராணுவம் சென்று அவரை பிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். ஏனென்றால் தற்போது இப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications