விமானத்தில் பால் குடித்த குழந்தை பலி
மலப்புரம்: விமானம் டேக்-ஆப் செய்தவற்காக ரன் வேயில் ஓடும்போது பால் குடித்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் மரணமடைந்தது.
கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி என்ற ஊரை சேர்ந்தவர் சீதா சிபு. ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பிரசவத்துக்கு வந்தார்.
குழந்தைக்கு 4 மாதம் ஆனதை தொடர்ந்து கணவருடன் ஓமனுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புறப்பட்டார். குழந்தை அழுததையடுத்து சீதா விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்த நிலையில் குழந்தை பிரித்வினுக்கு பாலூட்டியுள்ளார்.
இதையடுத்து குழந்தை மயங்கியது. இதைப் பார்த்து அதிர்ந்து போன சீதா, விமான சிப்பந்திகளிடம் நிலைமையை விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து குழந்தையை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications