சரணடைந்தார் வருண் காந்தி-சிறையில் அடைப்பு

முஸ்லீம்களுக்கு எதிராக விஷமமாக பேசியது தொடர்பாக பிலிபித் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் வருண் காந்தி மீது தேர்தல் ஆணையத்தின் புகாரின் பேரில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார் வருண் காந்தி. ஆனால் அவரது மனு அங்கு தள்ளுபடியானது. மேலும், அவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் மேலும் முன்ஜாமீன் கோர வேண்டாம் என பாஜக அவருக்கு அறிவுறுத்தியது.
இதன்மூலம் கோர்ட்டில் சரணடைந்து சிறைக்குச் சென்று அனுதாபத்தைப் பெற்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க உதவும் என்பதால் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது.
வருண் காந்தி கோர்ட்டில் சரணடையும் போது கூடவே இருக்குமாறு உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கல்ராஜ் மிஸ்ரா மிஸ்ராவுக்கு பாஜக உத்தரவிட்டது. இதையடுத்து ஏராளமான தொண்டர்களையும் வேன், லாரி, பஸ்களில் ஏற்றிக் கொண்டு பிலிபித் வந்தார் கல்ராஜ் மிஸ்ரா.
இதையடுத்து இன்று காலை பிலிபித் கோர்ட்டுக்கு ஊர்வலமாகக் கிளம்பினார் வருண் காந்தி. அவரது வருகையைத் தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் பெரும் திரளாக பாஜகவினர் குவிந்தனர். அவர் ஊர்வலம் வந்த பாதை முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த சரண்டர் ஊர்வலத்தின் இறுதியில், தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டுக்குள் நுழைந்தார் வருண் காந்தி. பின்னர் அவரது வக்கீல், சரணடைவது தொடர்பான மனுவை நீதிபதியிடம் அளித்தார்.
அதைப் பரிசீலித்த நீதிபதி, வருண் காந்தியை திங்கள்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சரணடைவதற்கான மனுவை தாக்கல் செய்த பின்னர் கூடியிருந்த செய்தியாளர்களிடையே வருண் காந்தி பேசுகையில், நான் கொள்கைகள், லட்சியங்களில் நம்பிக்கை கொண்டவன். அதற்காக சிறைக்குச் செல்ல தயாராக இருக்கிறேன்.
சிறைக்குப் போவதன் மூலம் தங்களது உரிமைகளுக்காக போராட மக்களுக்குப் பலம் கிடைக்கும். அதற்காக சிறை செல்கிறேன்.
மக்களுக்காக போராட விரும்புகிறேன். நீதித்துறை மீதும், சட்டத்தின் மீதும் எனக்கு நிறைய நம்பிககை உண்டு என்றார்.
முன்னதாக கோர்ட் பகுதியில், திரண்டிருந்த தொண்டர்களை கலைக்க போலீஸார் முற்பட்டபோது அவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில பாஜக தொண்டர்களும் சில போலீசாரும் காயமடைந்தனர்.
வருண் விவகாரத்தைத் தொடர்ந்து பிலிபித் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்வானி நடத்திய டிராமா-காங்கிரஸ்:
இந்த சரண்டர் டிராமா நாடகத்தை நடத்தியதே பாஜக தலைவர் அத்வானி தான் என மூத்த காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications