வைகோவை தோற்கடியுங்கள்-சுப்பிரமணிய சாமி
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசி வரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக, சரத்குமாரின் சமக, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதில் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியும் இடம் பிடித்துள்ளது. ஆனால், அவரது கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை.
இந் நிலையில் சுப்பிரமணிய சாமி கூறுகையி்ல்,
தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார். அவரது பேச்சு தேசத்துக்கு விரோதமானது.
அவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். எனவே விருதுநகர் வாக்காளர்களர்கள் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்த போது வைகோ நின்று கொண்டே இருந்தார். இது திராவிட கட்சிகளால் ஏற்பட்டுள்ள அவல நிலை என்றார் சுப்பிரமணிய சாமி.