ராஜபக்சேவை பாராட்டிய வக்கீல்-சக வக்கீல்கள் தர்ம அடி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் நடத்திய போராட்டத்தின்போது, ராஜபக்சேவை பாராட்டிப் பேசிய வக்கீலுக்கு தர்ம அடி கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ரஜினிகாந்த் என்பவர் தலைமையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு அழுகிய முட்டைகளால் அபிஷேகம் நடந்ததும் அடி, உதை விழுந்ததும் அதன் பிறகு நடந்த அமளி, துமளியும் நாடறிந்தது.
இந் நிலையில் ரஜினிகாந்த் தலைமையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு வக்கீலாக பேசிக் கொண்டிருந்தனர். சிவானந்தம் என்ற வக்கீல் பேசியபோது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை பாராட்டிப் பேசினார்.
இதனால் கோபமடைந்த வக்கீல்கள் சிவானந்தத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பாகிப் போனது.
தர்ம அடியிலிருந்து மீண்டு வந்த சிவானந்தம், தன்னை வக்கீல்கள் தாக்கியது குறித்து உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications