அரக்கோணத்தில் திமுகவின் ஜெகத்ரட்சகன் வென்றதாக அறிவிப்பு
அரக்கோணம்: அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவும், திமுக சார்பில் ஜெகத்ரட்சகனும் போட்டியிட்டனர்.
வாக்குகள் எண்ணி முடித்தபோது, ஜெகத்ரட்சகன் 4,11,453 வாக்குகளையும், வேலு, 3,03,630 வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மறு வாக்குப் பதிவு நடந்த மேல் வல்லம் வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக்குகளை எண்ணுவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையை கோரினர். இதையடுத்து அங்கு முடிவை அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய ஆலோசனைக்குப் பின்னர் மறு வாக்குப் பதிவு நடந்த வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.
இதன் இறுதியில், ஜெகத்ரட்சகன் 4,15,041 வாக்குகளும், வேலு, 3,05,245 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து 1 லட்சத்து 9 ஆயிரத்து 796 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகத்ரட்சகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications