நாளை கூடுகிறது பாமக பொதுக்குழு - தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை
சென்னை: பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டம் நாளை காலை டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சித் தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கை:
பாமக தலைமைப் பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இப்பொதுக்குழு நடக்கிறது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், இளைஞர் சங்க தலைவருமான அன்புமணி, எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் இந்த பொதுக் குழுவில் ஆலோசிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.