மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே தோல்விக்குக் காரணம் - பாமக

பாமக பொதுக்குழு இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் சென்னை காமராசர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
தேர்தல் தோல்வி குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது திண்டிவனம் தொகுதி முன்னாள் எம்.பி. தன்ராஜ், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படியெல்லாம் மோசடி செய்ய முடியும் என்பதை நிபுணர்கள் மூலம் விளக்கிக் காட்டினார்.
சிறிய வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாம்பழம், உதயசூரியன் உள்ளிட்ட நான்கு சின்னங்களை வைத்து ஒரு சின்னத்திற்கு மட்டும் ஓட்டுப் பதிவு செய்து அதை எண்ணும்போது அது உதயசூரியன் சின்னத்திற்கு போவது போல காட்டப்பட்டது.
கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
- ஆளும் கட்சியின் பணப்பலம், அதிகார துஷ்பிர யோகம், அதிக அளவில் நடந்தது கண்டிக்கத்தக்கது.
- தோல்வியை கண்டு பா.ம.க. சோர்ந்துவிடாது. இதை வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றுவோம்.
- வாக்கு சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
- நடத்தப்பட்டுள்ள முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு ஏற்க வேண்டும். முறைகேடுகளுக்கு இடமில்லாத வகையில் வாக்குப்பதிவு செய்ய மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.
- பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
- இலங்கையில் இனப்படுகொலை துரோகத்துக்கு இந்திய அரசு துணைப்போவதை கண்டிக்கிறோம் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications