மே.வங்கத்தில் மாவோயிஸ்ட் அட்டகாசம்-3 சிபிஎம் தொண்டர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil

மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தைப் பிடிக்கும் முயற்சியில், மாவோயிஸ்டுகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். லால்கர் என்ற இடத்தைப் பிடித்துள்ள அவர்கள் அங்கிருந்த சிபிஎம் தொண்டர்களையும், போலீஸாரையும் விரட்டியடித்துள்ளனர். அந்தப் பகுதி தற்போது நக்சலைட்டுகள் வசமாகியுள்ளது.
இந்த நிலையில் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்க்சோல் என்ற இடத்தில் 3 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்களை நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
அவர்களில் ஒருவர் சிமிலி கிளை சிபிஎம் செயலாளர் அமல் மஹதோ ஆவார்.
சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரும் போலீஸாருடன் இணைந்து ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.
தொடர்ந்து மாவோயிஸ்டுகள் அட்டகாசம் புரிந்து வருவதால் அவர்களை ஒடுக்க துணை ராணுவப்படையினர் அங்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications