சொத்து தகராறு-தாய் மீது ஆசிட் வீசிய மகன்!!
கோவை: கோயம்புத்தூரில் தனது பெயருக்கு சொத்தை மாற்றி தர மறுத்த தாய் மீது மகன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் செளரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவருக்கு பொன்னுத்தாய் பீவி என்ற மனைவியும், 8 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் நான்கு பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள்.
இவர்களது மகன்களில் மூன்று பேர் அப்பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மூன்று மகன்களில் ஒருவரான முகமது நசீர் என்பவர் அந்த மட்டன் கடைகளை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி அடிக்க்டி பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவர்கள் இவரது பேச்சை கேட்கவில்லை. மேலும், கடைகளை ஒருவருக்கே கொடுக்க முடியாது என கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வந்த நசீர், தாயாரிடம் எனக்கு அந்த மட்டன் கடையை எழுதி கொடுங்கள் என அடம்பிடித்துள்ளார்.
ஆனால் பொன்னுத்தாய் பீவி மறுத்துவிட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த நசீர் தன்னை பெற்ற தாய் என்பதை கூட மறந்து பொன்னுத்தாய் பீவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பொன்னுதாய் பீவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்ட போலீசார் நசீரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications