சொத்து தகராறு-தாய் மீது ஆசிட் வீசிய மகன்!!
கோவை: கோயம்புத்தூரில் தனது பெயருக்கு சொத்தை மாற்றி தர மறுத்த தாய் மீது மகன் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் செளரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவருக்கு பொன்னுத்தாய் பீவி என்ற மனைவியும், 8 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் நான்கு பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள்.
இவர்களது மகன்களில் மூன்று பேர் அப்பகுதியில் மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மூன்று மகன்களில் ஒருவரான முகமது நசீர் என்பவர் அந்த மட்டன் கடைகளை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரும்படி அடிக்க்டி பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவர்கள் இவரது பேச்சை கேட்கவில்லை. மேலும், கடைகளை ஒருவருக்கே கொடுக்க முடியாது என கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று மீண்டும் வந்த நசீர், தாயாரிடம் எனக்கு அந்த மட்டன் கடையை எழுதி கொடுங்கள் என அடம்பிடித்துள்ளார்.
ஆனால் பொன்னுத்தாய் பீவி மறுத்துவிட்டார். இதையடுத்து ஆத்திரமடைந்த நசீர் தன்னை பெற்ற தாய் என்பதை கூட மறந்து பொன்னுத்தாய் பீவி மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் பொன்னுதாய் பீவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்ட போலீசார் நசீரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications