ஈவ்டீசிங்-நாகர்கோவிலில் 3 மாணவிகள் விஷம் குடிப்பு
வள்ளியூர்: வள்ளியூர் அருகே ஈவ்டீசிங்கால் மனமுடைந்த 3 மாணவிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ்டீசிங், ராகிங் போன்ற கொடுமைகளை தடுக்க எவ்வளவோ சட்டங்கள் வந்த போதும் அவற்றை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அங்கும் இங்கும் மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.
இந்நிலையில் வள்ளியூர் அருகே கன்னாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று மாணவிகள் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக்கு போகும் போதும், வரும் போதும் சில மாணவர்கள் அவர்களை கேலி, கிண்டல் செய்துவந்துள்ளதாக தெரிகிறது.
சம்பவத்தன்று அந்த மூன்று மாணவிகளும் டியூசனுக்கு சென்று கொண்டிருந்த போது அவர்களை பின் தொடர்ந்த அந்த மாணவர்கள், அவர்கள் அழகாக இல்லை என கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அவமானமடைந்த அந்த 3 மாணவிகளும் எலி மருந்தை குடித்து, மயங்கி விழுந்தனர்.
இதைக்கண்ட அந்த மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டனர்.
இது குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் பள்ளி மாணவர்கள் சிலரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications