சிங்கள வீரர்களால் சிதைக்கப்பட்ட தமிழர்கள் - மீண்டும் அதிர்ச்சிப் படங்கள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: சிங்கள வீரர்களால் சிதைக்கப்பட்ட, குதறப்பட்ட நிலையில் தமிழர்களின் உடல்கள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்தின் சேனல் 4 சமீபத்தில் பரபரப்பு வீடியோ காட்சியை வெளியிட்டது. அதில் பிடிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களை இலங்கை வீரர்கள், கை, கண்களைக் கட்டி பின்னாலிருந்து துப்பாக்கியால் சுடும் கோரக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் ராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி, கோரமான நிலையில் உள்ள தமிழர்களின் உடல்கள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் புகைப்படங்களை ஈழ இணையளமான தமிழ்வின் வெளியிட்டுள்ளது. எப்போது, இவை எடுக்கப்பட்ட என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமான ஓடுபாதை போல அந்த இடம் காணப்படுகிறது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இறந்த ஒருவரின் தலை மீது இலங்கை வீரர் ஒருவர் தனது பூட்ஸ் காலை வைத்திருப்பதும் படத்தில் உள்ளது. இலங்கை ராணுவமே இந்தப் படத்தை எடுத்துள்ளது.

சிலரது உடல்கள் துண்டிக்கப்பட்டு பாதியாக காணப்படுகின்றன. சில உடல்கள் குதறப்பட்ட நிலையில் மிகக் கொடூரமாக உள்ளன.

இந்தப் புகைப்படங்களை யார், எங்கிருந்து வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

சேனல் 4 வீடியோக் காட்சிகளால் ஏற்பட்ட அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் இந்தப் புகைப்படங்கள் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+