விபத்து நடந்த நல்லமலாவில் ரெட்டிக்கு நினைவுசின்னம்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி கடந்த 2ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டம், வேலை வாய்ப்பு திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், வீடு கட்டும் திட்டம், சுயதொழில் கடன் உதவி, முதியோர் பென்சன், ரூ.2-க்கு கிலோ அரிசி போன்ற நலத்திட்டங்களால் பயனடைந்த மக்கள் பலர் அதிர்ச்சியால் மரணமடைந்தனர். பலர் தற்கொலை செய்துகொண்டனர். இதுவரை சுமார் 500 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் பலியான நல்லமலா காட்டு பகுதியில் அவருக்கு நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இது குறித்து ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர் கீதா ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில்,
மக்களி்ன் உண்மை தலைவராக திகழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மரணம் ஆந்திராவை நிலை குலையச் செய்துவிட்டது. அவரது கனவுகளையும், லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டியது ஆந்திர அரசின் கடமை.
அவர் விபத்தில் மரணமடைந்த நல்லமலா காட்டு பகுதிக்குள் விரைவில் நினைவுச்சின்னம் பிரமாண்டமாக அமைக்கப்படும். அவரது நினைவுச்சின்னத்தை பார்வையிட மக்களுக்கு போதுமான சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
ஹைதராபாத்தில் உள்ள புலிவெந்துலா பகுதியில் இருக்கும் அவரது சமாதியிலும் நினைவிடம் அமைக்கப்படும் என்றார்.
பிரேத பரிசோதனை போலீசிடம் ஒப்படைப்பு...
இந்நிலையில் விபத்தில் பலியான ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள், கர்னூல் மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து கர்னூல் மாவ்டட எஸ்பி ஸ்ரீகாந்த் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கை சீல் வைத்து எங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருக்கிறது என்பது தெரியிவில்லை என்றார்.
இந்த அறிக்கை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி மற்றும் விமான போக்குவரத்து துறையினரிடம் (டிஜிசிஏ) ஒப்படைக்கப்பட இருக்கிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications