தலிபான் மிரட்டல்-பாக்.கிலிருந்து வெளியேறும் இந்துக்கள்

தலிபான்களின் மிரட்டலுக்குப் பயந்து தங்களது வீடுகள், சொத்துக்கள் உள்ளிட்டவற்றை விட்டு விட்டு இவர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டனர். இந்தியாவுக்கு வந்த இவர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்பப் போவதில்லை என்றும் கூறுகின்றனர். இவர்களில் சிலரது குடும்பத்தினர் இன்னும் பாகிஸ்தானிலேயே உள்ளனராம்.
பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகத்தான் இவர்கள் பெருமளவில் வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இந்தியாவின் முனாபாவோ நகர் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது.
அன்று முதல் இந்த ரயில் மூலமாக இந்துக்கள் வருகை தொடங்கியது. முதல் ஆண்டில் 392 பேர் இந்தியாவுக்குத் திரும்பினர்.
2007ல் 880 பேரும், 2008ல் 1240 பேரும் வந்தனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 1000 பேர் வரை இந்தியா வந்துள்ளனர்.
இங்கு வந்து சேர்ந்துள்ள போதிலும், அவர்கள் பாகிஸ்தான் குடிமக்களாகவே இருப்பதால் தொடர்ந்து விசாக்களை நீடித்தபடி உள்ளனர். தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல். ஆனால் முறைப்படி இப்படி ரயில் மூலம் வராமல் வேறு மார்க்கங்கள் மூலம் எல்லை தாண்டி வந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். அவர்களையும் கணக்கில் கூட்டினால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தியாவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் துயரமான கதைகளுடன் உள்ளதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இவர்களிடத்தில் சற்று மென்மையாகவே நடந்து கொள்கின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள ரானாராம் என்பவரின் கதை சோகமானது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாவட்டம் ரஹீம்யார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவரது மனைவியை தலிபான்கள் கடத்திச் சென்று கற்பழித்து கட்டாயப்படுத்தி முஸ்லீமாக மாற்றி விட்டனராம். அதேபோல இவரது இரு மகள்களையும் கூட கட்டாயப்படுத்தி முஸ்லீம்களாக மாற்றியுள்ளனர். ரானாராமையும் கூட முஸ்லீமாக மாறி விட வேண்டும் என மிரட்டினராம். உயிருக்குப் பயந்து அதற்கும் ரானாராம் ஒத்துக் கொண்டார். ஆனால் இந்தியாவுக்குத் தப்பி ஓடி விட பின்னர் முடிவு செய்தார்.
இதையடுத்து தனது இரு மகள்களையும் கூட்டிக் கொண்டு இந்தியாவுக்கு வந்து விட்டார். ஆனால் இவரது மனைவியை மட்டும் கடைசி வரை இவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம். அவர் எங்கிருக்கிறார், உயிருடன்தான் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்கிறார் சோகத்துடன்.
இன்னொருவரான துங்காராம் கூறுகையில், பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் உள்ளன. அதிலும், முஷாரப் போன பின்னர் அங்கு அடக்குமுறைகள் அதிகரித்து விட்டன. முஸ்லீமாக மாறாவிட்டால் இந்துக்களுக்கு நிரந்தர வேலை என்பது கிடைக்கவே கிடைக்காது என்றார்.
பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள இந்துக்கள் நலனுக்காக செயல்படும் சீமந்த் லோக் சங்காதன் என்ற அமைப்பின் தலைவர் இந்து சிங் சோதா கூறுகையில், பாகிஸ்தானிலிருந்து பெருமளவிலான இந்துக்கள் அகதிகளாக வந்தபடி உள்ளனர். ஆனால் இவர்களுக்கேற்ற அகதிகள் பாதுகாப்பு கொள்கை அரசிடம் இல்லை.
2004-05ல் 135 இந்துக் குடும்பங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் மற்றவர்கள் இன்னும் சட்டவிரோதமானவர்கள் என்ற அந்தஸ்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களிடம் முறையான குடியுரிமை ஆவணங்கள் இல்லாததால் போலீஸ் கொடுமைக்கும் ஆளாகின்றனர்.
கடந்த ஆண்டு 2008ம் ஆண்டு பாகிஸ்தானின் மிர்பூர் காஸ் நகரில் 200க்கும் மேற்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களாக மாறினர். ஆனால் பலர் தொடர்ந்து இந்துக்களாகவே தொடருவது என்ற உறுதியுடன் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.
முனாபாவோ ரயில் நிலைய குடியுரிமைப் பிரவு அதிகாரி ஹேதுதான் சரன் கூறுகையில், வாரந்தோறும் 15 முதல் 16 குடும்பங்கள் வரை இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வருகின்றன. ஆனால் யாருமே இங்கு வந்து செட்டிலாகப் போவதாக கூறுவதில்லை. ஆனால் அவர்கள் கொண்டு வரும் மூட்டை முடிச்சுகளைப் பார்த்தவுடனேயே, இவர்கள் நிரந்தரமாக தங்க வருபவர்கள் என்பதை நாங்கள் புரிந்து கொண்டு விடுவோம் என்கிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications