உணர்ச்சியற்ற மத்திய அரசு-இல.கணேசன் தாககு
சென்னை: தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பற்றி மத்திய அரசு கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. அது உணர்ச்சியற்றதாகிவிட்டது என தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எந்தவொரு நாடும் தன் நாட்டு குடிமகன் அன்னிய நாட்டினரால் துன்புறுத்தப்பட்டால் ஆர்த்தெழுந்து நீதி கேட்கும். இந்திய குடிமக்களாகிய நமது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுகின்றனர். ஆனால், மத்திய அரசு அது குறித்து சிறிதும் கவலைப்படாமல் உணர்ச்சியற்று இருக்கிறது.
எல்லையை காப்பது என்றால் கடலையும், கடற்கரையும் காப்பது தான். கடலோர பகுதியில் வசிக்கும் குடிமக்களை காப்பது தங்கள் கடமையில்லை என இந்திய கடற்படை கருதுகிறதா?
இந்திய மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதை கண்டித்தும், இது குறித்து மவுனம் சாதிக்கும் செயலற்ற மத்திய அரசை கண்டித்தும், கடலில் எல்லைகளை வரையறுத்து காட்ட ஒளியை பிரதிபலிக்கும் மிதவைகளை அமைக்க கோரியும், கச்சத்தீவு கடல்பகுதியில் இந்திய மீனவர்களுக்கு உள்ள உரிமையை மீட்டுத்தர வேண்டியும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது.
நாளை ராமேஸ்வரத்தில் போராட்டம்...
இது நாளை காலை 10 மணிக்கு ராமேஸ்வரத்தில் நடத்துகிறது. பொதுமக்களும், மீனவ சமுதாயமும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு நல்க வேண்டுகிறேன் என அறிக்கையில் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications