ஆசிரியர் சில்மிஷம்-பெற்றோர்கள் போராட்டம்
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து மட்டும் 110 பேர் படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பள்ளி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரச்சனை எழுந்தது.
இந்த விவகாரம் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் பள்ளி ஆசிரியரை மாற்ற கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், மீனாட்சிபுரம் மக்கள் கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் பகுதியில் பள்ளி அமைத்து குழந்தைகளுக்கு கல்வி பெற ஏற்பாடு செய்ய வேண்டுமேன கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் 93 பேரின் மாற்று சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கினர். நேற்று அந்த மாற்று சான்றிதழ்களுடன் ஊர் மக்கள் சிலர் நெல்லையில் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். உடனடியாக தங்களது பகுதியில் பள்ளி அமைத்து கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications