ஆசிரியர் சில்மிஷம்-பெற்றோர்கள் போராட்டம்
நெல்லை: சுரண்டை அருகே மாணவியிடம் ஆசிரியர் சில்மிஷம் செய்ததாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து குழந்தைகளை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே கேஎம் அச்சம்பட்டியில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து மட்டும் 110 பேர் படிக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவரிடம் பள்ளி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பிரச்சனை எழுந்தது.
இந்த விவகாரம் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு தெரிய வரவே அவர்கள் பள்ளி ஆசிரியரை மாற்ற கோரியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், மீனாட்சிபுரம் மக்கள் கல்வி துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் பகுதியில் பள்ளி அமைத்து குழந்தைகளுக்கு கல்வி பெற ஏற்பாடு செய்ய வேண்டுமேன கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் 93 பேரின் மாற்று சான்றிதழை பள்ளியில் இருந்து வாங்கினர். நேற்று அந்த மாற்று சான்றிதழ்களுடன் ஊர் மக்கள் சிலர் நெல்லையில் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். உடனடியாக தங்களது பகுதியில் பள்ளி அமைத்து கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications