விஜயவாடா-இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 6 குழந்தைகள் பலி

விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வார்டில் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
குறைந்த பிரசவத்தில் பிறந்த சில குழந்தைகள் இன்குபேட்டர் சாதனத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவற்றில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
இன்குபேட்டர் சரியாக இயங்காததாலும் ஆக்சிஜன் கருவிகள் செயல்படாததாலும் குழந்தைகள் இறந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குழந்தைகளின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். டாக்டர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பத்மா என்பவர் கூறுகையில், எனது பேரனை இங்கு வைத்திருந்தோம். எனது பேரன் திடீரென மூச்சுத் திணறலுக்குள்ளானான். இதையடுத்து நான் டாக்டர்களைக் கூப்பிடச் சென்றபோது அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். வர மறுத்து விட்டனர்.
எனக்கு நீதி வேண்டும். எனது பேரனைப் போல பலரது குழந்தைகள் இன்று பலியாகியுள்ளன. இதற்கு நீதி வேண்டும் என்றார் கோபத்துடன்.
இறந்த குழந்தைகளின் பெற்றோர் கூறும்போது, எங்கள் குழந்தைகள் உடல் நலம் மோசமாக இருப்பதாக டாக்டர்களிடமும், நர்சுகளிடமும் தெரிவித்தபோது அதை கண்டு கொள்ளவே இல்லை. வேண்டுமானால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று அலட்சியமாக கூறினார்கள். கடைசியில் எங்கள் குழந்தைகளை இழந்து விட்டோம் என்று கதறினார்கள்.
ஆனால் டாக்டர்களோ 6 குழந்தைகள் சாவுக்கு இன்குபேட்டர் இயங்காதது காரணம் அல்ல. 3 குழந்தைகள் இயற்கையாக இறந்துள்ளனர். மற்ற குழந்தைகள் சாவு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.
குழந்தைகள் இறந்தது பற்றி அறிந்ததும் உள்ளூர் எம்.எல்.ஏ.க்கள் உமா மகேசுவரராவ், மல்லாடி விஷ்ணு ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களும் டாக்டர்கள் மீது குறை கூறினார்கள்.
இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து அறிக்கை தருமாறு மாநில மனித உரிமை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நாகேந்தர் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த டாக்டர்கள் குழுவை விஜயவாடாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன என்றார்.
இதற்கிடையே, பல மாதங்களுக்கு முன்பே தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான ரூ. 70 லட்சம் மதிப்பிலான சாதனங்களை ஒதுக்கக் கோரி மாநில அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டதாம். ஆனால் அது ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று டாக்டர்கள் தரப்பி்ல குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் இதை அமைச்சர் நாகேந்தர் மறுக்கிறார். அவர் கூறுகையில், அப்படி ஒரு கோரிக்கை எனக்கு வரவே இல்லை. என்னிடம், ரூ. 3800 கோடிக்கான பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கையில், ரூ. 70 லட்சத்தை நான் ஒதுக்கியிருக்க மாட்டேனா என்கிறார்.
அரசு அலட்சியமோ, டாக்டர்கள் அலட்சியமோ, இப்போது எங்களது குழந்தைகளை இழந்து விட்டோம். இதற்கு அரசும், டாக்டர்களும் பதில் சொல்லியாக வேண்டும் என்கிறார்கள் குழந்தைகள் அநியாயமாக இழந்த பெற்றோர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications