வாசுகி முருகேசன் இரங்கல் கூட்டம் - கதறி அழுத ஸ்டாலின்

கரூர் திமுக செயலாளர் வாசுகி முருகேசன் நேற்று தனது காரில் கோவை செல்லும் போது சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவு அருகே எதிரே வந்த டேங்கர் லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இங்கிருந்து கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு
போஸ்ட்மார்டம் செய்த பிறகு அவரது உடல் நேற்று இரவு கரூர் கொண்டு வரப்பட்டது.
கரூர் அருகே உள்ள தவளாபாளையத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாசுகி முருகேசன் இறந்த தகவல் அறிந்து தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் , மத்திய அமைச்சர்கள் ராஜா, பழனி மாணிக்கம், நெப்போலியன், காந்தி செல்வன், மாநில அமைச்சர்கள் அன்பழகன், பொன்முடி, கே.என்.நேரு, செல்வராஜ், எ.வ. வேலு, ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, சாமிநாதன், வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை, கீதா ஜீவன், பெரியகருப்பன் மற்றும் எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோரும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இன்று மதியம் தளவாபாளயத்தில் இருந்து வாசுகி முருகேசனின் இறுதி ஊர்வலம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
கரூர் திமுக மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசன் கார் விபத்தில் மரணமடைந்தார் என்ற தகவல் அறிந்து அதை தலைவர் கலைஞரிடம் சொல்ல முடியாமல் தவித்தோம். இருந்தும் அவரிடம் அதை சொல்லிய போது அவர் எங்களை கட்டிப்பிடித்து அழுதார். தலைவரால் அந்த துயரத்தை தாளவே முடியவில்லை.
வீராங்கனை என்று எத்தனையோ பேர் அடையாளம் காட்டியது உண்டு. ஆனால் வீரமங்கையாகவே வாழ்ந்தவர் வாசுகி முருகேசன்.
நான் வெளிநாடு சென்று விட்டு தமிழகம் வந்த பிறகு என்னை பார்க்க அவர் விமானம் பிடித்து வர இருந்தார். ஆனால் நான் விமானம் பிடித்து அவரது உடலை பார்க்கும் படியாக ஆகி விட்டது.
இந்த மாவட்டத்திலே அவர் என்னை பல நிகழ்ச்சிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நான் இன்று அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும்படியாக ஆகிவிட்டது.
பேராசிரியர் கூறும் போது வாசுகியை ஒரு ஆணுக்கு சமம் என்றார். அவரது அனுமதியோடு கூறுகின்றேன். வாசுகி முருகேசன் பல ஆண்களுக்கு சமமாக கழக பணியாற்றிவர்.
அவரது மறைவுக்கு கலைஞர் சார்பிலும், திமுக தலைமை கழகம் சார்பிலும் அழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கூறியபோது துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications