நாகர்கோவில் அருகே சர்ச்சில் குண்டு வெடிப்பு - பாதிரியாரைக் கொல்ல சதி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே சர்ச்சில் குண்டு வெடித்தது. இது அந்த சர்ச்சின் பாதிரியாரைக் கொல்ல நடந்த சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவில்-ராஜக்கமங்கலம் அருகே உள்ளது தம்மத்துகோணம். இங்கு சிஎஸ்ஐ சர்ச் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை பாடகர் குழு பயிற்சி எடுத்தது. பின்னர் சர்ச்சை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு சர்ச்சை திறக்க ஊழியர்கள் வந்தனர்.
அப்போது சர்ச்சில் பாதிரியார் அறை சுவரின் வெளிப்புறத்தில் பெரிய துளை காணப்பட்டது. அறை முழுவதும் மண் சிதறியும், பிளாஸ்டிக் இருக்கை சேதமடைந்தும் காணப்பட்டது. திரி உள்பட வெடிபொருட்கள் நாலாபுறமும் சிதறி கிடந்தன. அங்குள்ள கழிவுநீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு அது வெடித்து சிதறியது தெரிய வந்தது.
தகவல் அறிந்ததும் ராஜாக்க மங்கலம் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வந்து பார்வையிட்டனர். அதிகாலை 2 மணியளவில் வெடி சத்தம் கேட்டதாகவும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அங்கு யாரும் செல்ல முயலவில்லை என்றும், அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து சர்ச் செயலர் ஜெபசிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாதிரியார் அறைக்கு அருகே குண்டு வீசப்பட்டுள்ளதால் அவரை கொல்ல நடந்த சதியா அல்லது சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications