நோயாளியிடம் செக்ஸ் செல்மிஷம்- பிசியோதெரபிஸ்ட் கைது
கோவை, சரவணம்பட்டி, ஜனதா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் சகோதரி மாலதி (26) சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்தார்.
இதனால் அவரது காலில் கடும் வீக்கம் ஏற்பட்டதால், திருச்சி ரோட்டில் உள்ள ஒரு எலும்பு சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மாலதியை டாக்டர்கள் பரிசோதனை செய்து சதை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, பிசியோதெரபி செய்து கொள்ள பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து, அவருக்கு சூலூரைச் சேர்ந்த, பிசியோதெரபிஸ்ட் பூபதி (32) என்பவர் சிகிச்சை அளித்துள்ளார்.
இந்த நிலையில், மாலதி தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த பூபதி, படுக்கையில் இருந்த மாலதிக்கு பயிற்சி அளிப்பது போல நடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இனால் அதிர்ச்சியடைந்த மாலதி கடும் கூச்சல் போட்டார். இதனையடுத்து, வெளியில் இருந்த சகோதரர் சுரேஷ் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பூபதியை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் பிசியோதெரபிஸ்ட் பூபதிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர் மீது, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்தல், துன்புறுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications