தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கருணாநிதி தலைமையில் குழு
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுத் தலைமைக் குழு முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைக்ப்பட்டுள்ளது. இதில் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். அதேபோல, இணைய மாநாட்டுக் குழுவில் கவிஞர் கனிமொழி இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழு, சிறப்பு மலர்க் குழு மற்றும் தமிழ் இணைய மாநாட்டு குழு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
கோவை மாநகரில் 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி ஏற்கனவே ஆய்வரங்க அமைப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கவும், அறிவுரைகள் வழங்கவும் முதல்வர் தலைமையில் மாநாட்டுத் தலைமைக் குழு பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்-முதல்வர் கருணாநிதி, துணைத் தலைவர்கள்-அமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், உலகத் தமிழாய்வுக் கழக துணைத் தலைவர் முனைவர் வா. செ.குழந்தைசாமி, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்கள்- தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலர் கு. ஞானதேசிகன், அமைப்பாளர்- உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தனி அலுவலர் கா.அலாவுதீன்.
மேலும், இம்மாநாட்டினையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவதற்காக நிதியமைச்சர் க.அன்பழகன் தலைமையில் சிறப்பு மலர்க் குழு ஒன்று பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்-நிதி அமைச்சர் க.அன்பழகன், துணைத் தலைவர்கள்-மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவாசகம், முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன்.
உறுப்பினர்கள்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கரு.அழ.குணசேகரன், சென்னை வானதி திருநாவுக்கரசு, சென்னை பூம்புகார் பிரதாப்சிங், ஒருங்கிணைப்பாளர்-தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கூ.வ.எழிலரசு.
இது தவிர உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக உத்தமம் எனப்படும் உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்துடன் இணைந்து தமிழ் இணைய மாநாடு நடத்தவும், முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பின்வருமாறு தமிழ் இணைய மாநாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தலைவர்- கான்பூர் ஐ.ஐ.டி.தலைவர் பேராசிரியர் மு.ஆனந்த கிருட்டிணன், அமைப்பாளர்-அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ஒருங்கிணைப்பாளர்-தகவல் தொழில் நுட்ப துணை செயலர் டேவிதார், உறுப்பினர்கள்-மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் பி.ஆர்.நக்கீரன், மத்திய அரசு தேசிய தகவல் மையம் மோகன், உத்தமம் துணைத் தலைவர் டி.என்.சி.வெங்கடரங்கன், கணினி தமிழ்ச் சங்கம் ஆன்டோ பீட்டர், இந்திய மொழிகளின் தொழில் நுட்ப மேம்பாடு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக இயக்குனர் ஸ்வரன் லதா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குனர் டாக்டர் சந்தோஷ் பாபு.
இக்குழுவினர் தங்களுடைய பணிகளை உடனடியாக தொடங்கி முனைப்புடன் மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications