ஸ்வைன்: குஜராத்தில் பலி எண்ணிக்கை 128ஆனது

வட மாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில் பன்றிக்காய்ச்சலும் பரவி வருகிறது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் பலமடங்கு அதிகரித்துள்ளது.
அகமதாபாத், ராஜ்கோட், பூஜ், வதோதரா, ஜுனகாத் போன்ற பகுதிகளில் ஏராள மானோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 762 பேருக்கு எச்1என்1 வைரஸ் தாக்கியிருப்பது சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அகமதாபாத் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த உஷாரானா (25) நேற்று திடீரென இறந்தார்.
இதேபோல் ஜம்னாகர் மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட அனாமிகர்கரே (28) சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுவரை குஜராத்தில் மட்டும் 128 பேர் பன்றிக்காய்ச்சலால் பலியாகியுள்ளனர். இவர்களில் எட்டு பேர் ராஜஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக குஜராத் வந்தவர்கள்.












Click it and Unblock the Notifications