மகளிர் மசோதா – லோக்சபாவில் நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கலாகாது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியல் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாத காரணத்தால் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்காலாகாது என்று தெரிகிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மே மாதம் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் மகளிர் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இதுவரை எட்டப்படவில்லை.
இதுகுறித்து மத்திய அமைச்சராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், இன்னும் ஒருமித்த கருத்த எட்டப்படவில்லை. எனவே நடப்பு தொடரில் லோக்சபாவில் மசோதா தாக்கலாவது கஷ்டம்தான்.
முதலில் நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமையில் அரசு உள்ளது. அதில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications