தமிழகத்துக்கு புதிதாக 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள்
சென்னை: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர்களில் 14 பேர் தமிழகத்தில் பணியில் சேரவுள்ளனர்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வாகியுள்ள இவர்கள், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் பணியில் சேர உள்ளனர்.
இந்த 14 பேரில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன்மூலம் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் சொந்த மாநிலத்திலேயே பணியிடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஐ.பி.எஸ். காலியிடங்களைப் பொருத்து, புதிய ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணியிடம் ஒதுக்கப்படுவது வழக்கம். இந்த காலிப் பணியிடப் பட்டியல், ஒவ்வொரு மாநிலத்தின் உள்துறையிடம் இருந்தும் பெறப்படும்.
அதன்படி, 2011ம் ஆண்டில் தமிழகத்திற்கு 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.
இதில், சி.விஜயகுமார், எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி, தர்மராஜ், துரை, பி.விஜயகுமார் ஆகியோர் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்ள்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழகத்திற்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications